வியாழன், 16 ஏப்ரல், 2015

எண்ணம் செயலாய், பழக்கமாய் - எம். எஸ். உதயமூர்த்தி

                                                      "ஒரு மனிதனின் பழக்க வழ க்கங்கள் அவனை அறிந்து கொள்ள உதவும் நல்ல மனக்கண்ணாடி" - என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
                        நல்ல எண்ணங்களிலிருந்து நல்ல பழக்கங்கள் ஏற்படுகின்றன.அதேபோல் நல்ல பழக்கவழக்கங்களை வலுக்கட்டாயமாக அனுசரிப்பத்தின் மூலம், நமது மன ஓட்டங்களை - எண்ணங்களை மாற்றலாம். சுத்தமான சலவை வேஷ்டியையும், சலவைச் சட்டையையும் அணிந்து புறப்படும் போது மனத்தில் எழும் புத்துணர்ச்சியை, ஒரு திருப்தியை, ஒரு பெருமையை ஒரு கணம் நினைத்து பாருங்கள். புதிதாகப் போகும் ஓர் அலுவலகத்தினுள் எல்லாம் கச்சிதமாக, ஒழுங்காக, துப்புரவாக, இருக்கும் ஒரு நிலை, நம் மனதில் எப்படி ஒரு சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது என்று எண்ணிப் பாருங்கள். மன துயரத்திலோ சோகத்திலோ மூழ்கும் போது ஓர் இனிமையான பாட்டை முணுமுணுத்துப் பாருங்கள். நம் மனநிலை மாறுபடுவதை உணர்வீர்கள். 
                                                            பிரச்சினைகளுடன் வரும் மனநோயாளிகளை முதலில் மருத்துவர் ஓர் இதமான சாய்வு நாற்காலியில் படுக்கச் சொல்லுகிறார். இதமான படுக்கை ஒரு நிம்மதியையும், பாதுகாப்பையும் தருகிறது. இதனால் எண்ண நிலை மாறுகிறது.
                                                                    ஊமைத்துரை ஒரு துரும்பை கையிலெடுத்து அதை நான்காகக் கிள்ளி உள்ளங்கையில் வைத்து ஊதுவாராம். அவரது மன உணர்வுகளில் இத்தகைய செயல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதைக் கவனியுங்கள். திறமை மிக்க திரைப்பட இயக்குனர்கள் கதாபத்திரத்தின் கோபத்தையோ உணர்ச்சியையோ வசனம் மூலம் வெளிப்படுத்துவதை விட்டு, கதாபாத்திரத்தின் ஒரு சிறு செயல் மூலம் மன ஓட்டங்களைக் காட்டுகிறார்கள்.

                                                                    நமது புற நடவடிக்கைகளை மாற்றவும் அதன் மூலம் நம் மன நிலையை மாற்றவும் மன நூலார் பல வழிகளைக் கூறுகின்றனர்.
                                                                   "முகத்தில் புன்னகையைத் தவழ விடுங்கள். கொஞ்சம் கம்பீரமாக நின்று பருங்கள். தலை நிமிர்ந்து நடவுங்கள். நடக்கும் வேகத்தை சிறிது அதிகப்படுத்திப்  பாருங்கள். கூட்டங்களில் முன் வரிசைகளில்  உட்கார்ந்து பழகுங்கள். பிறருடன் பேசும் போது குரலை உள்ளே விழுங்காமல் தெளிவாக நிதானமாகப் பேசிப் பாருங்கள். பிறருடன் பேசும்போது, கண்களைக் கண்ட இடத்திலும் பரவ விடாமல் பேசுபவரை நேரே நோக்கிக் கண்களைச் செலுத்துங்கள்" என்கின்றனர் மனநூலார். தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் இதைவிட நல்மருந்து வேறில்லை.
                                                                




















Aksharamanamalai with Tamil lyrics

ஞாயிறு, 22 மார்ச், 2015

உலக தண்ணீர் தினம் - Happy Water Day

தண்ணீருள் இருந்து வந்தோம் 
தண்ணீரால் பிரிந்து நிற்கிறோம்.
தண்ணீருக்காக பல மைல்கள் நடக்கிறோம் ஆனால் 
தண்ணீர் இருக்கப் பெற்றவர்கள் 
தண்ணீரைச் சேமிக்க மறந்தோம்.
ஒன்றிணைவோம் - நதிகளை ஒன்றிணைப்போம் 
வளம் செழிப்போம் . வளர்வோம் 

உலக தண்ணீர் தின வாழ்த்துக்கள் 

சனி, 14 மார்ச், 2015

Watch This without Crying!!

உயிர்களிடத்தில் அன்பு  வேண்டும் - இது வாழும் முறைமையடி பாப்பா!

வெள்ளி, 13 மார்ச், 2015

பர்வீன் சுல்தானா - காணொளி

நயத்தக்க நாகரிகம் - குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் பங்கு - தமிழ் மொழி தமிழனின் முகவரி - கற்பதில் கற்பிப்பதில் நமது பலவீனம் என பல கோணங்களில் திருமதி.பர்வீன் சுல்தானா அவர்கள் பேசியிருக்கும் கீழ்காணும் காணொளி என்னை மிகவும் வசீகரித்தது. 

புதன், 11 மார்ச், 2015

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ? – கிட்னி ஹெல்த் டிப்ஸ் - By Mathavi [downloaded from Internet ]

சிறுநீரக கோளாறு

                         நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.
                                          பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.
                                                  அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.
                                       பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.
                                அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
                           சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
                               இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.
               விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.
                               மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.
                                          இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

நன்றி - http://moonramkonam.com/

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பிரவுஸியதில் பிடித்தது,

Compu Comedy 


P1  : நான் தான் Lord of Internet தெரியுமா?
  :   எப்படி ?
  :   ஏன்னா என் பெயர் மகாலின்கேஷ்வர் (மகா -Hyper  - Link)ஆயிற்றே!

Why Linux has cat command?
To control the mouse !? ! ...

Why is the cat moving around the computer?
To catch the mouse?!

டச் ஸ்க்ரீன் கம்ப்யூட்டர் உருவானதன் காரணம் என்ன?
mouse - க்கு மவுசு போனதால்.

கவி பாரதி கணிப்பொறியாளர் ஆக இருந்திருந்தால் அவர் பெயர் என்னவாக இருந்திருக்கும்?
கணி பாரதி

கம்ப்யூட்டர் திருக்குறள்:
1. Copy paste செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
    Coding  செய்து  சாவார்.

2. எம்மொழி மறந்தார்க்கும் Job  உண்டாம் job இல்லை
    Java -வை மறந்தவர்க்கு.

3. Bug கண்டுபிடித்தாரை  ஒறுத்தல் அவர் நாண
    Debug செய்து விடல்

4. கற்க கசடற கம்ப்யூட்டர் - ல் கற்றபின்
    சேர்க்க ஷேர் செய்ய.

5. டிவிட்டரினால் டிவிட்டிய செய்தி சிறிதெனினும்
    Trend -ன் மாணப் பெரிது.

Sardharji in a computer class
              Sir         : What is Microsoft Excel?
              Sardarji :  It is a new brand of Surf Excel sir !!??..
              Sir         :   >:-(

Life Before Computer [ BC]

  • Memory was something that you lost with age
  • An application was for an employment
  • A program was a TV show
  • A cursor used profanity. [cursing ]
  • Keyboard was a Piano
  • A web was a spider's home
  • A virus was the flu
  • A CD was a bank account
  • A hard drive was a long trip on the road
  • A mouse pad was where mouse lived.

Top ten Free Learning Websites For Kids [ International Level]

a year of many firsts: Ready Made for Second Grade! Free Websites for kids



Image result for alt ctrl delImage result for alt ctrl del

Image result for computer cartoons

உலக தாய்மொழி தினம்

உலக தாய்மொழி தினம் - 21.02.2015

அம்மா - பிள்ளைக்கு உலகம்.

உலகத்தை பிள்ளைக்கு சொல்லித் தர தாய் பயன்படுத்தியது மொழி, அதன் வழி பிள்ளைகளை பண்படுத்தினாள் .

அத்தகு  தாய்மொழியின் தினத்தைக் கொண்டாடுவது என் தாயையே கொண்டாடுவது போல் ஆகும்.

என் தாய்  மணிவயிரம் தந்த மணிமொழியாம் தமிழ் மொழிக்கும், உலகின் பிற மொழிகளுக்கும், அம்மொழி மாந்தர்களுக்கும் அடியேனின் வாழ்த்துக்கள்.

சனி, 7 பிப்ரவரி, 2015

நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

மீனாவிற்கு கல்யாணம் !


நான் வாழ வைப்பேன் என்ற அப்பவோ விண்ணில் விண்மீனாய்!

அசலை விட வட்டி (பேரன் பேத்தி) தான் சுவாரசியமானது என்ற அம்மாவோ விடி வெள்ளியாய்!

அன்பை தந்து அரவணைக்க அக்கா அண்ணன் தம்பி இதற்கும் மேல் சொந்தங்கள் பூம்பாதையாய்!

மண்ணில் நல்ல வண்ணம் வாழ மாதவன் வெங்கடேசன் ஆலயத்தில் சுப்ரபாத நேரத்தில் துயில் எழும் இறைவன் துயிலால் தான் பெற்ற ஆற்றலை வாரி வழங்க வாரியாய் !

சுற்றம் சூழ வாழ்வை துவங்கும் தங்கைக்கு வாழ்த்துக்கள் !

மதுரையின் இளவலுக்கு, மதுரையின் நாயகியை அண்ணன் கேசவனின் கையால் கண்ணிகா தானம் !

நாள் : 09.02.2015
இடம் : சின்ன திருப்பதி, காருவள்ளி , சேலம்.

அருட்பேராற்றல்  கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வீர்களாக! வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!




ஞாயிறு, 11 ஜனவரி, 2015

அப்பாவின் ஓர் இருமல்

நடு இரவில் கண் விழிக்க நேர்கையில்
   மனதில் உருவாகும் ஒரு பயம்
அது சமயம் என்னைத் தேற்றி ஆற்றும்
    அப்பாவின் ஓர் இருமல்
கோபத்தில் அவரின் உருமலும் கூட
    மனதிற்கு ஓர்  ஆறுதல் - ஏதோ
சாபத்தால் காணவில்லை
    அவரின் இருமலும் உறுமலும்
கூடவே எங்கள் ஆறுதலும்.

சனி, 27 டிசம்பர், 2014

உயிரெழுத்தில் அம்மா - எங்கள் உயிர்



அன்பு

ஆருயிர்

இணைபாலம்

ஈசுவரரூபம்

உன்னதம்

ஊட்டு(க்கு)வித்தவள்

எளிமை

ஏணியானவள்

ஐவரைப் பெற்றவள்

ஒளியானவள்

ஓய்வற்றவள்

ஒளஷதமானவள்







அன்பும் அறனும்

ஆருயிரும் ஆசுவாசுமும்

இனிப்பும் இன்பமும்

ஈரமும் ஈகையும்

உள்ளமும் உவகையும்

ஊழ்தவமும் ஊதியமும் (முற்பிறவி பயன்)

எண்ணமும் எழுச்சியும்

ஏற்றமும் ஏழிசையும்

ஐம்பூதமும், ஐநிலமும்

ஒப்புரவும் ஒழுக்கமும்

ஓதலும் (விருந்து) ஓம்பலும்

ஒளவையும் ஒளஷதமுமானவள்




அன்னமிட்ட அன்னை

ஆசையாய் என்னை

இயல் இசையாய்

ஈன்றபொழுதின் பெரிது

உவக்க உவகையாய்

ஊக்குவித்து முழுமையாய்

என்னை எனக்கறிவித்து

ஏதும் அறிவிக்காமல்

ஐயன் பாதத்தில்

ஒளியாக கார்த்திகையில்

ஓசையின்றி போனாளே!

ஒளவியம் பேசுகிறேன்

அஃதும் அவளில்லாததால்!












ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

ஆசை









சுத்தியாய் நீதி சொல்ல ஆசை

வத்தியாய் வாசம் வீச ஆசை

மத்தாப்பாய் புன்னகைக்க ஆசை

கித்தாப்பாய் நிலைத்திருக்க ஆசை

தத்தம் கொள்கையில் நின்றிருக்க ஆசை

நித்தமிறை நினைவிலிருக்க ஆசை

புத்தனைப் போல் உய்விக்க ஆசை 

யுத்தமில்லாமல் வாழ ஆசை 

சத்தமில்லாமல் சாக ஆசை 

சுத்தமாய் வெளிச்சம் சேர ஆசை