சனி, 27 டிசம்பர், 2014

உயிரெழுத்தில் அம்மா - எங்கள் உயிர்



அன்பு

ஆருயிர்

இணைபாலம்

ஈசுவரரூபம்

உன்னதம்

ஊட்டு(க்கு)வித்தவள்

எளிமை

ஏணியானவள்

ஐவரைப் பெற்றவள்

ஒளியானவள்

ஓய்வற்றவள்

ஒளஷதமானவள்







அன்பும் அறனும்

ஆருயிரும் ஆசுவாசுமும்

இனிப்பும் இன்பமும்

ஈரமும் ஈகையும்

உள்ளமும் உவகையும்

ஊழ்தவமும் ஊதியமும் (முற்பிறவி பயன்)

எண்ணமும் எழுச்சியும்

ஏற்றமும் ஏழிசையும்

ஐம்பூதமும், ஐநிலமும்

ஒப்புரவும் ஒழுக்கமும்

ஓதலும் (விருந்து) ஓம்பலும்

ஒளவையும் ஒளஷதமுமானவள்




அன்னமிட்ட அன்னை

ஆசையாய் என்னை

இயல் இசையாய்

ஈன்றபொழுதின் பெரிது

உவக்க உவகையாய்

ஊக்குவித்து முழுமையாய்

என்னை எனக்கறிவித்து

ஏதும் அறிவிக்காமல்

ஐயன் பாதத்தில்

ஒளியாக கார்த்திகையில்

ஓசையின்றி போனாளே!

ஒளவியம் பேசுகிறேன்

அஃதும் அவளில்லாததால்!