சனி, 7 பிப்ரவரி, 2015

நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

மீனாவிற்கு கல்யாணம் !


நான் வாழ வைப்பேன் என்ற அப்பவோ விண்ணில் விண்மீனாய்!

அசலை விட வட்டி (பேரன் பேத்தி) தான் சுவாரசியமானது என்ற அம்மாவோ விடி வெள்ளியாய்!

அன்பை தந்து அரவணைக்க அக்கா அண்ணன் தம்பி இதற்கும் மேல் சொந்தங்கள் பூம்பாதையாய்!

மண்ணில் நல்ல வண்ணம் வாழ மாதவன் வெங்கடேசன் ஆலயத்தில் சுப்ரபாத நேரத்தில் துயில் எழும் இறைவன் துயிலால் தான் பெற்ற ஆற்றலை வாரி வழங்க வாரியாய் !

சுற்றம் சூழ வாழ்வை துவங்கும் தங்கைக்கு வாழ்த்துக்கள் !

மதுரையின் இளவலுக்கு, மதுரையின் நாயகியை அண்ணன் கேசவனின் கையால் கண்ணிகா தானம் !

நாள் : 09.02.2015
இடம் : சின்ன திருப்பதி, காருவள்ளி , சேலம்.

அருட்பேராற்றல்  கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வீர்களாக! வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!