செவ்வாய், 8 டிசம்பர், 2015

மழை வரத்தை சாபமாக்கியது யார் குற்றம்?

mazhaiyin saatchi

வீடியோ உபயம்  - தமிழ் வானம் 

வாரித் தந்த வள்ளல் 
மாரித் தாயின் மகவு 
ஊரைக் காக்க ஊற்றும் 
ஏரித் தண்ணீராய் ஏற்றம் 
பெற்ற நீரைப் 
பேணிக் காப்போம்!

நீர் வளம் காக்க இயலாத பலருள் நானும் ஒருவள் முத்தாரம் 

செவ்வாய், 10 நவம்பர், 2015

தங்கைக்கு தலை தீபாவளி - வாழ்த்துக்கள்

                                தாய் தந்தை இல்லாமல் அண்ணனின் முயற்சியில் புக்ககம் சென்றாள் தங்கை. அவளின் தலை தீபாவளி - ஆனால் அன்னை இறந்த வருடாந்திரம் முடியாத காரணத்தினால் முறையான தீபாவளி இல்லை என்றாலும் கடவுளுக்கு படையல் என்ற ஒன்று இல்லாமல் சாதாரணமாக சிறு விருந்து செய்தோம். மனது நிறைய மண்ணில் அடங்கிய பெற்றோர் நிறைந்திருக்க, கடவுளை வணங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அப்பா அம்மா நன்றிகளால் நிறைகிறது எங்கள் மனது. உங்கள் ஆசியை தினம் தினம் யாசிக்கிறேன். மனம் நிறைய உங்களை பூஜிக்கிறேன். வாழ்வின் வளம் பொங்க தவிக்கிறேன். நானும் பிறந்தேன் என்றில்லாமல் என் பிறப்பு சரித்திரமாக மாற நான் தகுதியானவளாக, சரித்திரமாக்க பத்மா அருணாசலம் அருள வேண்டும்.

புதன், 15 ஜூலை, 2015

கர்மவீரர் காமராஜர் மண்ணில் உதித்த தினம் இன்று!

தாத்தாக் கைப் பிடித்து வாக்கிங் போகவும், போகும் வழியில் அவர் அனுபவங்களைக் கேட்கவும், அவருக்குச்  சலிப்பு வந்தாலும் சளைக்காமல் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலடையவும், பாட்டியின் அணைப்பில் பல கதைகள் கேட்டு வாழ்வின் நிதர்சனத்தை உணரவும் கொடுப்பினை வேண்டும். அக்கொடுப்பினை ஏனோ எனக்கும் என் சகோதர சகோதரிகளுக்கும் வாய்க்கவில்லை. அதனால் அம்மாவிடம் தாத்தா பற்றிக் கேட்கும் போதெல்லாம் அவள் சொல்வதுண்டு, "எங்க அப்பா ரொம்ப  ரொம்ப ரொம்ப ... நல்லவர். நம்ம காமராஜர் மாதிரி", என்று. அதனால் தானோ என்னவோ எனக்குக் காமராஜர் மீது மிகப் பெரிய ஈர்ப்பு. "கிராமத்தில் தற்போது எங்கள் பெயரில் இருக்கும் வீடு காமராஜர் அருளியது. ஒரு சமயம் எங்கள் ஊர் தீ விபத்துக்கு (1950 -60) உள்ளான போது வசித்த வீடுகள் எல்லாம் விபத்தில் நாசமாகியது. அது சமயம் புணர் வாழ்விற்காக எம் ஊர் மக்களுக்கு வீடு கட்டி அவ்வீ டுகளுக்கு மக்களை உரிமை தாரர்கள் ஆக்கினார்  காமராஜர்", என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். விளம்பரம் எதுவும் தேடிக்காத வியத்தகு மனிதர். நல்லவராகவே வாழ நாம் விரும்பினாலும் மாய உலகம் நம்மில் பல சபலங்களை உற்பத்தி செய்து விடுகிறது. அவற்றை எல்லாம் கடந்து நல்லவராய் பிறரை வாழ்விப்பதில் வல்லவராய், சபலங்களுக்கு ஆட்படாமல் வாழ்ந்ததாலேயே  அவர் கர்ம வீரர்! அவருக்கு என் கவிதாஞ்சலி! 
உன் பெயரோ காமராஜ் !
நீயோ தமிழ் நாட்டின் சாம்ராட்!
கருணையில் நீ ஒரு புத்தர் - உன்
தொலைநோக்கிலோ நீ ஒரு சித்தர்!
முன்னேற்றம் பலவிற்கும்  நீயே காரணகர்த்தர்.
ஏழை மனக்குறிப்பறியும் நல வித்தகர்  
நீ பிறந்ததோ ஜூலை பதினைந்து
சேவைகள் பல செய்தாய் மனமுவந்து!
உன் சேவைகளை நினைந்து
உன் மேல் பாட வந்தேன் சிந்து!
மக்கள் நலன் பல விழைந்து
அவரின் துயர் பல கலைந்து
வெளியிட்டாய் பல ஜி.ஒ.
பட்டறிவால் அறிந்தாய் Geo
அதனால் உண்டானது பல அணை
கடவுள்போல் மக்களுக்கானாய் துணை!
ஐம்பூதங்களிலும் உன் ஆட்சி!
விண்ணைத் தாண்டும் உன் மாட்சி!
நீரை அடக்கினாய் அணையினால்!
மின் சக்தி பெற வைத்தாய் அனலினால்!
காற்றில் கலந்த சுகந்தமானாய்  !
நிலத்திலடங்கினாலும் விண்ணுக்கு ஒப்பானாய்!
வாழ்த்த வேண்டிய அவசியமில்லை!
தன்னால் வளர்கிறது உன் புகழ்!
நெஞ்சம் நிமிர்ந்திடத் திகழ்!
என்றென்னை வாழ்த்திட வேண்டும் உன் இதழ்!
உன் வழியில் என்றும் நாங்கள்
வளர்ந்து வாழ்ந்திட வேண்டும் பல காலங்கள்!
வாழ்த்துவாய் எம்மை!
வளர்த்துவோம் உம் பெருமை!
சொல்லிலடங்கா உன் சேவைகளை
பட்டியலிட முயன்று
முடியாததால் முடிக்கின்றேன் நான் முத்தாரம்!





புதன், 1 ஜூலை, 2015

தலை கவசம் உயிர் கவசம்

இன்று ஜூலை 1 முதல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாயத் தலை கவசம் அணிதல் சட்ட முறை அமுலுக்கு வந்தது. இன்று காவல் துறை அலுவலர்கள் கூட தலைக் கவசம் அணிந்து சென்றது மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது. 

ஞாயிறு, 21 ஜூன், 2015

Happy International yoga day

                                                        ஜூன் 21 சூரிய வெளிச்சம் அதிகம் வெளிப்படும் நாள். இந்தியரின் யோகக் கலைக்கு உலகளாவிய அங்கீகாரமே உலக யோகா தினம். இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். யோகக் கலையை அனுதினம் மேற்கொள்வோம்.


happy fathers day

அருகிலில்லை அப்பா!
ஆதரவாய் அவர் ஆன்மா!
இவர் போல் இவ்வுலகில்
ஈதல் இசைபட வாழ்ந்தவர் எவர்?
உறவின் உன்னதம்


வெள்ளி, 12 ஜூன், 2015

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின நாள் - கொண்டாடுவதற்கு அல்ல வழக்கத்திற்கு கொண்டு வர!

கல்வி எமது முதல் உரிமை! - அதை 
களவாடுதல் தகுமோ?

கனிவாய் எமது வாழ்வாதாரம் 
கனிந்திட உதவிடுவீர்! 

குழந்தைத் தொழிலுடைமை - நம் 
குடிமையியலுக்கு சாபக்கேடு!

பரிகாரம் என்ற ஒன்றுண்டேல் - அது 
பள்ளிப் படிப்பு ஒன்றேயாம்!

ஒன்றுபடுவீர்! குழந்தைத் 
தொழிலாளர் முறை ஒழிப்பீர்! 

குழந்தைத் தொழிலாளர் இல்லாத இந்தியா வளமான இந்தியா! - 
அதனால் வல்லரசாகும் இந்தியா!

இந்த   எதிர்ப்பு    தின      நாள்
கொண்டா டுவதற்கு   அல்ல
வழக்கத்திற்கு கொண்டு வர!

ஜெய் ஹிந்த்! ! !

                 ஒரு குழந்தைத் தொழிலாளியின் மனக்குமுறல்!

புதன், 10 ஜூன், 2015

அம்மா வந்தாச்சு !

        சங்கீதாவிற்கு இன்று ஒரே அம்மா ஞாபகம்? நாளைக்கு அன்னையர் தினம். அம்மா கூட இருந்தால் நன்றாயிருக்கும்? நடக்குமா? நடக்குமென்றால் எப்படி? தெரியவில்லை.
       போன  வருடம் அம்மா கூட இருந்தது நினைவில் வந்து போனது. அம்மா அப்பிராணி போலத் தெரிவாள். ஆனால் அப்பிராணி   அல்லள். பேதை போலத் தெரிவாள் ஆனால் அவள் ஒரு  மேதை. அவள் சொல்லித்தந்த கதைகள் மனசுக்குள் காவியங்களாய் கல்லெழுத்துக்களாய் அழகிய ஓவியங்களாய் என்றுமே மறையாதவை. அவள் பாடிய பாடல்களை பி.சுசீலா வந்து பாடினாலும் மனது ஏற்காது. அம்மா வருவாளா? என் நைந்து போன உள்ளம் தைத்து வைக்க அவள் வருவாளா? அடிகொருதரம் கண்கள் ஏனோ அம்மாவைத் தேடியது. அம்மா வரணும் மனது வேண்டியது. அதற்காக வேலை செய்யாமலா இருக்க முடியும்?
         சிங்கில் அழுக்கு பாத்திரங்கள் காத்திருந்தது. அவற்றை ஆதரிக்கும் வண்ணம் விளக்கி அலசிக் வைத்தாள். "கண்ணு பாத்தா கை செய்யணும்" - அம்மா அடிக்கடி சொல்லும் வசனம். அது எவ்வளவு சரியான ஒன்று என்பதை சமீப காலமாக அதை உண்மை என்பதை சங்கீதா உணர்கிறாள். சின்னச் சின்னதாக பாத்திரங்கள் விழும் போதே செய்யணும் என நினைக்கிறாள். ஆனால் அதிகமாக பாத்திரம் சேர்ந்த பிறகே மிகவும் கஷ்டப் பட்டு செய்கிறாள். எடுக்கிற பொருள் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். சரியான படி இல்லாததை பார்க்க நேர்ந்தால் உடனே அதை சரியாக வைக்க வேண்டும். இப்படி அம்மாவோட வழி நடத்துதல்கள் எராளம். அம்மா வரணுமே என மனது மிக ஏங்கியது.
    தூங்கும் போது கூட ஆடை விலகாமல் ஒருக்களித்து அழகாகத் தூங்க வேண்டும். தூங்கினாலும் பெண்ணுக்குள் ஒரு விழிப்பு உணர்வு இருக்க வேண்டும்.  "அது அவளை இராவணன் கோட்டையிலும் சீதையாக்கும்" -என்பது அம்மா அபிப்ராயம். அப்படித்தான் அம்மா வளர்த்தாள். அப்படி வளர்ந்த காலத்தில் அம்மா மேல் கோபம் கோபமாக வரும். அனால் இன்று அந்த வளர்ப்பு பலராலும் பாராட்டப் படுகிறது. அம்மா சிம்ப்ளி கிரேட் .
                 வேலையெல்லாம் முடிந்தது.  கணினியில் பேஸ்புக் பக்கங்களை பார்த்துக் கொண்டிருந்தாள். நிறைய அன்னையர் தின வாழ்த்துக்களை பலர் அள்ளி விட்டிருந்தார்கள். அம்மா எப்போம்மா வருவே? மனம் முழு வீச்சில் ஏங்கியது.
                "சங்கீதா. . .  சங்கீதா. . .  " வாசலில் அம்மாவின் குரல் போல் கேட்டது. மனது "இது எப்படி சாத்தியம்?  பிரமையோ"எனக் கூறிக் கொண்டது.   "சங்கீதா. . .  சங்கீதா. . .  " மீண்டும் அதே குரல், ஆனால் கொஞ்சம் ஆண்மை கலந்திருந்தது. சந்தேகத்துடன் வாசல் சென்று கதவைத் திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி. வந்திருந்ததோ  இரத்தினம் மாமா. சங்கீதாவிற்கு தாய் மாமா. அம்மாவின் அண்ணா.
        அவளுக்கோ மகிழ்ச்சி. போன மாதம் மீளாத் துயரில் எங்களை ஆழ்த்தி விட்டுச் சென்ற அம்மா இன்று எப்படி வர இயலும்? ஆனால் அவள் வந்து விட்டாள், பத்மா அம்மாவாக இல்லை, சங்கீதாவின் அம்மானாக. கடவுள் எவ்வளவு கிரேட். "தாய் மாமன் தாய்க்கு சமம்" - அம்மாவின் ஒலிகள் காதில் ஒலித்தது. "மாமாவைப் பாரு! நானும் தெரிவேன்", என அம்மா பாடுவது போல் இருந்தது. அம்மா(ன்) வந்தாச்சு. அன்னையர் தினம் கொண்டாட. அம்மா(ன்)வை கவனிக்க, விருந்து படைக்க சங்கீதா ரெடியானாள்.

க(ன்)னியும் மாங்கனியும்

ஜூன் மாதம் பத்து நாட்கள் சென்று விட்டன. கிட்டத்தட்ட மாம்பழ சீசன் முடியப் போகிறது. இன்னும் முழுதாக ஒரு பழம் கூட இனிதாக சாப்பிட முடியவில்லை. இன்று இரயிலில் கோடம்பாக்கம் கடந்து வந்த போது ஒரு வீட்டில் மரத்திலேயே பழுத்து தொங்கிய பழத்தைப் பார்த்த போது மனது அந்த எட்டாக் கனியைப் பறித்து உண்ண துடித்தது. இனி வரும் காலத்தில் ஒவ்வொருவரும் தானே மரம் வளர்த்து அம்மரத்தில் விளையும் கனியை பறித்து உண்பதுவே நம்பகமானதாகும். அது இயலாத பட்சத்தில் கார்பைடு கல்லை மனதில் இருந்து தூக்கி விட்டு ரிஸ்க் எட்த்து சாப்பிட்டால் மட்டுமே மாங்கனியை உண்ணலாம். இப்படி இருந்த என் மன ஓட்டத்தில் மாங்கனியும் கன்னியும் ஒரு விதத்தில் ஒன்று தான் எனப் பட்டது.

தானே கனிய வேண்டிய கனியை கார்பைடால்  கனிவிக்கிறார்கள். தானே காதல் கனியாததால் அமிலம் வீசி முகத்தை கன்றிப் போக வைக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள், க(ன்)னியும் மாங்கனியும்  ஒன்றுதானே!

சனி, 30 மே, 2015

உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று

உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று
புகையிலையால் மனித உடல் நலனுக்கு ஏற்படும் தீங்கினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் 1987-ஆம் ஆண்டு மே மாதம் 31-நாளில் புகையிலை எதிர்ப்பு நாளாக அறிவித்தது.
புகையிலையை எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அது மனிதனின் உறுப்புகளை சிறிது சிறிதாக பாதிப்படையச் செய்கிறது. வாய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்று நோய், காசநோய், விடாத இருமல், மூச்சுத்திணறல், இருதய நோய், ஆஸ்துமா, சிறுநீரகக் கொளாறு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களை ஏற்படுத்தி மனிதனின் ஆயுட் காலத்தை குறைக்கிறது. புகையிலைப் பொருட்களில் 40-க்கும் மேற்பட்ட நிக்கோடின், ஹைட்ரஜன் சயனைட், ஆர்சனிக், கார்பன் மோனோ ஆக்ஸைடு, ஃபார்மால்டிஹைடு போன்ற கொடிய நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை வேகமாக முதுமைப் பருவத்தை தோற்றுவிக்கிறது.
புகையிலைப் பொருட்களை கைவிட மனநல மருத்துவரை அணுகலாம் அல்லது உங்களுக்கு விருப்பமான இசை, புதிய மொழி, தியானம், ஓவியம் வரைதல், யோகாசனம் போன்றவற்றில் கவனத்தை செலுத்தலாம். தன்னுடைய குடும்ப நலனை மனதில் நிறுத்தி புகையிலை அடிமைத் தனத்திலிருந்து விடுபட இந்நாளில் உறுதி செய்வொம்.
YENI - ஏணி's photo.
நன்றி  - Yeni  - ஏணி 


திங்கள், 25 மே, 2015

உலக தைராய்டு தினம்


YENI - ஏணி's photo.இன்றைய வரலாறு
உலக தைராய்டு தினம் இன்று
மனிதனின் கழுத்துப்பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பி, நாளமிள்ளா சுரப்பிகளின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.  சுரப்பியாகும். உடல் சோர்வு, மறதி, உடல் எடை குறைதல் அல்லது கூடுதல், தசைகள் பலம் குறைதல், தூக்கமின்மை படபடப்பு, எரிச்சல் போன்றவை தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டுள்ளதன் அறிகுறியாகும். உடலில் அயோடின் சத்து குறைவாக இருந்தாலும் இந்நோய் ஏற்படுகிறது. தைராய்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தைராய்டு சர்வதேச கூட்டமைப்பு 2007-ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் மே-25-ஆம் நாளினை உலக தைராய்டு தினமாக அறிவித்து அனுசரித்து வருகிறது.

ஞாயிறு, 24 மே, 2015

இன்றைய வரலாறு - May 24

இன்றைய வரலாறு
காசநோய்க்கு காரணமான பாக்டீரியா(Bacillus) அறிவிக்கப்பட்ட தினம் இன்று ராபர்ட் ஹென்ரிச் ஹென்மென் கோச் ஜெர்மனியின் ஹானோவரில் உள்ள கிளாஸ்தல் எனும் இடத்தில் 1843-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ல் பிறந்தார். உயிரியல் வல்லுரான ராபர்ட் கோச் 1882-ல் காசநோய்க்கு காரணமான தொற்றுநோய் நுண்ணுயிர் பாக்டீரியாக்களை அவரின் புதிய தொழில்நுட்ப உதவியடன் கண்டறிந்து தனிமைப்படுத்தினார். மேலும் காலரா, ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கான தொற்றுக் காரணிகளையும் கண்டுபிடித்தார். இதன் காரணமாக ராபர்ட் கோச் நவீன நுண்ணுயிரியல் ஆய்வின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார். மருத்துவ நுண்ணுயிரியலில் ராபர்ட் கோச் உருவாக்கியுள்ள நான்கு நிலையான கொள்கைகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. 1905-ஆம் ஆண்டு காசநோய்க்கு காரணமான பாக்டீரியாவை கண்டறிந்ததற்காக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நன்றி :- YENI - ஏணி

வெள்ளி, 22 மே, 2015

சர்வதேச பல்லுயிர் தினம்


                  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலகின் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து சர்வதேச பல்லுயிர் தினத்தை இன்றைய நாளில்(மே-22) கொண்டாடி வருகிறது. கடந்த நூற்றாண்டில் அனைத்து துறைகளிலிலும் ஏற்பட்ட அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் நில மற்றும் நீர் வாழ் உயிரினங்கள், காட்டில் வாழும் பல் வகை உயிரினங்கள் என உலகின் அனைத்து உயிர் வாழ்விகளுக்கும் அச்சுறுத்தலாகவும், பல இனங்கள் அழியும் நிலையிலும் உள்ளன. தொழிற்சாலை மாசு மற்றும் கழிவுகள், மறுசுழற்சி செய்ய இயலாத எலக்ட்ரானிக் குப்பைகள், மட்காத பாலித்தின் பைகள், செயற்கை சாயக்கழிவுகள், மருத்துவக் கழிவுகள் என்று உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் புவி வெப்ப மண்டல வாயுவின் சராசரி வெப்ப அளவு விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் புவியின் துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இன்னும் 100 வருடங்களில் புவியின் சில பகுதிகள் கடலில் மூழ்கி பல உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது, கடலில் சேரும் கழிவுகளினால் கடல் வாழ் உயிரினங்கள் சிலவும் மறைந்து வருகின்றன. ஆகையால் சர்வதேச பல்லுயிர் தினமான இன்று நாம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியேற்போம்.

நன்றி :-     
YENI - ஏணி

புதன், 20 மே, 2015

உலக அளவியல்(Metrology) நாள்



உலக அளவியல்(Metrology) நாள் இன்று
நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று சர்வதேச அளவியல் சார்ந்து உள்ளன.
முதன் முதலாக 1875-ஆம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர். இதன் மூலமாக வேகமாக வளர்ந்து வரும் வணிக யுகத்தில் மூலப் பொருட்களை சார்ந்து வெவ்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஓரிடத்தில் ஒன்றிணைக்க சர்வதேச அளவியல் பயன்படுகிறது.
மேலும் இயந்திரங்கள், மருத்துவத்துறை, விண்வெளி மற்றும் அறிவியல் துறை ஆகியவற்றில் தயாரிக்கப்படும் சாதனங்களை துல்லியமாக அளவிட ஒளியினைக் கொண்டு அளவிடும் ஒளியியல் தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
அளிவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில்(மே-20) உலக அளவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

Happy World Metrology Day - 20 May - 2015

World Metrology Day 

World Metrology Day celebrates the signature by representatives of seventeen nations of the Metre Convention on 20 May 1875. The Convention set the framework for global collaboration in the science of measurement and in its industrial, commercial and societal application. The original aim of the Metre Convention – the worldwide uniformity of measurement – remains as important today as it was in 1875. The World Metrology Day project is currently realized jointly by the BIPM and the OIML together with PTB International Technical Cooperation. The theme for World Metrology Day 2015 is ‘Measurements and Light’. The topic was chosen to align with the UNESCO International Year of Light and Light-based technologies 2015 (IYL 2015), a global initiative designed to highlight the key role light and optical technologies play in our daily lives and their importance for our future and for the sustainable development of the society we live in.Metrology plays a central role in enabling the application of light-based technologies, and in turn, light is at the heart of many of the most important new elements of leading-edge measurement technologies.World Metrology Day is an annual celebration of the signature by representatives of seventeen nations of the Metre Convention on 20 May 1875. The Convention set the framework for global collaboration in the science of measurement and in its industrial, commercial and societal applications. The original aim of the Metre Convention - the world-wide uniformity of measurement - remains as important today as it was in 1875.The World Metrology Day project is realized jointly by the BIPM  and the OIML.

BIPM

The International Bureau of Weights and Measures (French: Bureau international des poids et mesures), is an international standards organisation, one of three such organisations established to maintain the International System of Units (SI) under the terms of the Metre Convention (Convention du Mètre). The organisation is usually referred to by its French initialism, BIPM.
The other organisations that maintain the SI system, also known by their French initialisms are the General Conference on Weights and Measures (FrenchConférence générale des poids et mesures) (CGPM) and the International Committee for Weights and Measures (FrenchComité international des poids et mesures) (CIPM).

OIML

The International Organization of Legal Metrology (FrenchOrganisation Internationale de Métrologie Légale - OIML), is an intergovernmental organization, created in 1955 and based in Paris, to promote the global harmonization of the legal metrology procedures that underpin and facilitate international trade. Such harmonisation ensures that certification of measuring devices in one country is compatible with certification in another, thereby facilitating trade in the measuring devices and in products that rely on the measuring devices. Such products include weighting devicestaxi metersspeedometers, agricultural measuring devices such as cereal moisture meters, health related devices such as exhaust measurements and alcohol content of drinks.
Since its establishment, it has developed a number of guidelines to assist members, particularly developing nations, to draw up appropriate legislation concerning metrology across all facets of society and guidelines on certification and calibration requirements of new products, particularly where such calibration has a legal impact such as in trade, health care and taxation.
The OIML works closely with other international organisations such as the International Bureau of Weights and Measures (BIPM) and International Organization for Standardization (ISO) to ensure compatibility between each organisation's work. The organisation has no legal authority to impose solutions on its members, but its recommendations are often used by member states as part of their own domestic law.
As of October 2013, 59 countries had signed up as full members and a further 67 as corresponding (non-voting) members including all the G20EU and BRICS countries. Between them, the OIML Members cover 86% of the world's population and 96% of its economy.

சனி, 9 மே, 2015

தாய் கிரகம்!


அன்பைப் பாலாய் வார்த்தாய்!
பாசத்தைப் பரிவுடன் காட்டினாய்!
நேசத்தை நெகிழ்வுடன் காத்தாய்!
கனிவைக் கண்ணுக்குள் வைத்தாய்!
துக்கத்தின் வடிகாலாய் வந்தாய்!
ஏக்கத்தின் வாசனையை மறைத்தாய்!
அவனியில் ஒவ்வொருவரும் அன்னைக்கு 
ஓர்  ஆலயம் வைத்திட 
நினைத்திட்டால் புவனத்தில் ஏது 
மாந்தர்க்கு வசதி?
எனவே விண்ணில் ஒரு 
பூமி சமைத்து வைத்தேன் 
அதன் பெயர் தாய் கிரகம்!

அன்னைக்கு அன்னையர் தின வழ்த்துக்கள் 





வாழ்க தாய்மை!      
வளர்க நம் மனத்தூய்மை!!     
மேலும் உய்க நம் பெருமை!!! 

ஞாயிறு, 3 மே, 2015

Tamil palindrome sloga by Thirugnana Sambandar (திருஞான சம்பந்தர்) by sivaparanur From The blog hindutemplefacts.wordpress.com

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

நாவை  நடனமிடச் செய்வதோடு உச்சரிப்புக்கும் சவால் மற்றும் படிப்பினை தருகிறது.

சமயம் என கருதினால் சுலோகம். வகுப்பு எனக் கருதினால்  பாடம்

சமயம் எனக் கருதினாலும், பாடம் எனக் கருதினாலும் தன்யனாவேன்.

கீழ்காணும் சுலோகம் 

hindutemplefacts.wordpress.com -ல் இருந்து எடுக்கப்பட்டது.


நன்றி - The blog  - hindutemplefacts.wordpress.com


வேத(சம்ஸ்கிருத) ஸ்லோகங்களும் அவற்றின் மொழி பெயர்ப்பும் என்று நினைக்க வேண்டாம், கீழே உள்ளது திருஞான சம்பந்தர் அருளிய ஒப்பற்ற தேவார பதிகமாகும். சிறந்த பொருள் பொதிந்த பதிகம் என்பதால் அவசியம் பொருளையும் படித்துப் பார்க்க. பதிகம் பாடுவதற்கான பலனும் இறுதியில் உண்டு. இந்த பதிகம் மாலைமாற்று(palindrome) எனப்படும். கீழிருந்து மேலாக படித்தாலும் சொற்கள் மாறாது இருக்கும். இதை படித்தபின் நாம் தமிழர்களா என்ற சந்தேகமும் எழலாம்!!!
1. யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
பொழிப்புரை :
ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!
2. யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
பொழிப்புரை :
வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. மகா சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.
3. தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
பொழிப்புரை :
அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே!
4. நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
பொழிப்புரை :
என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே. தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.
5. யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.
பொழிப்புரை :
யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! அறிவில் மேம்பாடு உடையவனே! அனைத் துயிர்கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே! என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் வாயாக!.
6. மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
பொழிப்புரை :
மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.
7. நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.
பொழிப்புரை :
உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே! ஒப்பற்ற தாயானவனே! ஏழிசை வடிவானவனே! நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின் உட் பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ?
8. நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
பொழிப்புரை :
இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று சொல்லப்படும் பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே. மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க வரும்போது காத்தருள்வீராக! மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின் சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக! ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா? (அடியேம் சிறுமையால் செய்த பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).
9. காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
பொழிப்புரை :
காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே. பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!.
10. வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
பொழிப்புரை :
நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே. புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.
11. நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
பொழிப்புரை :
நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக! என்று நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ள திருஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமானைப் போற்றி அருளிய, பாடுவோர்களையும், கேட்போர்களையும் உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது