திங்கள், 27 ஏப்ரல், 2015

அப்பா - நீங்காத நினைவுகள்

அன்றொரு நாள் இதே தேதியில் அப்பா இறந்தார். மனம் ஏற்காத அந்த நிதர்சனத்தை ஒரு வழியாக ஏற்றுக் கொண்டோம். மண்ணுக்கு உரமான அவரை தனித்து விட மனமில்லாத அம்மாவும் மனம் விரும்பி மரணம் ஏற்றார். உரமோடு உரமாக  அப்பாவுடன் அம்மா தன்னைக் கரைத்துக்  கொண்டாள். பாதைகளில் வயதான தம்பதியரைக் காண நேரும் போதெல்லாம் மனது கரைகிறது. ஆனால் மனமோ அவர்களை வாழ்த்துகிறது. இவர்கள் என் பெற்றோரின் பிம்பங்கள் ஆயிற்றே?!