ஞாயிறு, 11 ஜனவரி, 2015

அப்பாவின் ஓர் இருமல்

நடு இரவில் கண் விழிக்க நேர்கையில்
   மனதில் உருவாகும் ஒரு பயம்
அது சமயம் என்னைத் தேற்றி ஆற்றும்
    அப்பாவின் ஓர் இருமல்
கோபத்தில் அவரின் உருமலும் கூட
    மனதிற்கு ஓர்  ஆறுதல் - ஏதோ
சாபத்தால் காணவில்லை
    அவரின் இருமலும் உறுமலும்
கூடவே எங்கள் ஆறுதலும்.