வெள்ளி, 15 ஜனவரி, 2016

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

அன்று பெய்த மழையில் அரும்பாடுபட்டு 
ஆடிப் பட்டம் தேடி விதைத்து 
இனிய பொங்கலன்று விளைச்சலை இன்பத்தோடு 
ஈன்றெடுத்த பிள்ளைகளுடன் ஈசன் அருள் நாடி 
உறவுகள் கூடி உள்ளபடி உழவனை, 
ஊனையும் உயிரையும் காக்கும் இயற்கையை 
எண்ணத்தால் கோல வண்ணத்தால் வணங்க 
ஏலக்காய் மணத்துடன் பச்சரிசிப் பால் பொங்கி 
ஐயன் அருணனுக்கும் வருணனுக்கும் நன்றி பாராட்ட 
ஒரு முத்தான வாய்ப்பு ! கொண்டாடுவோம்
ஓங்கி வளர்ந்த கரும்பு, மஞ்சளோடு !
அஃதே எமது விருப்பும் வாழ்த்தும்!
உழவில்லாமல் உணவில்லை! உணவில்லாமல் உயிரில்லை!
உழவால் உயர்! உழவே உயிர்!
உயிரைக் காப்போம் பாரம்பரியத்துடன்!
உழவை வணங்குவோம்! உழவனுக்குத் தோள் கொடுப்போம்!
உழவர் தினத்தில் என்றும் இன்பம் தங்கும் 
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !




வெள்ளி, 8 ஜனவரி, 2016

MY DRAWING





my drawing

அம்மா தைத்த ஆடையை அணிந்ததில் இருந்த இன்பம் கோடி ரூபாய் பெருமானமுள்ள ஆடையில் வரவில்லையே! அன்னையை எங்கு தேடுவேன்! இன்பத்தை என்று மீண்டும் காண்பேன்!


புலி  பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது இது தானோ!


கலிகாலத்தில் புலி புல்லைத் தின்று விடுமோ, இப்பூவை உண்டு விடுமோ என்று ஐயுறுகிறாளோ இப்பூவை!


ஞாயிறு, 3 ஜனவரி, 2016

தமிழ் இராமாயணம்

தமிழில் இராமாயணம் படிக்க நான் வலைத்தளத்தில் தேடி உலாவியதில் எனக்குக் கிடைத்த pdf. ஆசிரியர் பெரிய மனதுடன் பகிர்ந்திருந்த இதனை மேலும் பலரைச் சென்றடைய விரும்பி அதற்கான இணைப்பை இங்கு இணைக்கிறேன். பலன் பெறுக!

தமிழ் இராமாயணம்