புதன், 28 மே, 2014

காரிய சித்தி மாலை – விநாயர் துதி

காரிய சித்தி மாலை – விநாயர் துதி
பந்தமகற்றும் அனந்த குணப்பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டிருந்து கரக்குமோ
சந்த மறை ஆகமங்கலைகள்  அனைத்தும் எவன் பால் தகவருமோ
அந்த இறையாங் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

உலகம்  முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப்பயனை ஊட்டும் களைகண் எவ்ன்ந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணமடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால் அரிவிழும் பஞ்செனமாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம்  எவனால் முடிவுறும் அத்
தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணமடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவின் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணமடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவறிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிழும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணமடைகின்றோம்.

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய்  நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணமடைகின்றோம்.

பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்குமவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக் கணபதியை திகழச் சரணமடைகின்றோம்.


சுபம்