செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

ஏதோ ஒரு பாடல் என் காதில் கேட்கும் அதைக் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்.

எவ்வளவு உண்மையான வரிகள்!.
சில பாடல்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - இவ்வரிகளைக் கேட்கும் தோறும் ஞாயிறு நாட்களில் எங்கள் சிறு பிராயத்தில் எங்கள் பெற்றோரோடு நேரம் செலவிட்ட நாட்களில் பொழுதுபோக்காக அப்பா தன்னை ஒரு பாடகன் போல அசைவுகள் தந்த வண்ணம் பாடியதுண்டு. இதன் மூலம் அப்பா, "நல்ல பிள்ளைகளாக வளர்ப்பது எங்கள் கடமை அதனை பின்பற்றுவது உங்கள் கடமை",  என எங்களுக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

தூங்கப் போகையில் "இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் " - பாடியிருக்கிறார்.

பாலும் பழமும் கைகளில் ஏந்தி மெட்டில் வேலும் மயிலும் கைகளில் ஏந்தி என முருகன் பாடலை அம்மா ரொம்ப அழகாக பாடுவார்கள். 

அம்மாவும் அப்பாவும் அப்படி ஒரு understanding . சண்டைகள் பல இருந்திருந்தாலும் பிரிவு அவர்களுக்குள் இல்லவே இல்லை. 

மயக்கமா கலக்கமா பாடலை எத்தனை  தடவை பாடி இருப்போம். 

அப்பாவிற்கு சிவாஜி நடிப்பு மிகப் பிடிக்கும். இருந்தாலும் எம்.ஜி.ஆர் படங்களையே பார்க்க விரும்புவார். கேட்டால் எம்.ஜி.ஆர். படங்களின் முடிவு சுபமாக இருக்கும். ஆனால் சிவாஜி நடிப்பிற்கு முக்கியத்துவம் தந்து எதிர்மறை முடிவுகளோடு படம் முடியும் என்பார்.

முதல் மரியாதை படத்தின் பாடல்கள் எங்களுக்கு குடும்பப் பாடலாகவே மாறிய கதை ஒரு சுவாரசிய நிகழ்வு ஆகும். அந்தப் படம் release ஆன சமயம் தான் என் சின்ன தம்பி பிறந்தான். அவனோ தொட்டிலில் தாலாட்டும் போது நீதானா அந்தக் குயில் எனப் பாடினால் அகா முக மலர்ந்து சிரிப்பான். எப்போது அப்படப் பாடலைக் கேட்கும் போதும் மனம் முழுதும் அப்பாவே நிறைவார்.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் வரிகளைக் கூறும் போது அறிவியலை அதிகம் பேசுவார்.

ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது எனப் பாடும் தோறும் தன் கனவை வெளிப்படுத்துவார். 

இவற்றையெல்லாம் விடுங்கள். முத்துக்கு முத்தாக என் சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து  வந்தோம் ஒன்றுக்குள் ஒன்றாக பாடலை கேட்டாலே அவருக்கு ஒட்டிக் கொள்ளும் பரவசம் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் தந்தை மற்றும் சித்தப்பாக்களை நினைந்து பர பரப்பாக பல விஷயங்கள் பேசுவார். குடும்ப உறவுகளில், சொந்த பந்தம் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாடு அதீதம். 

அண்ணாமலை SERIAL  தலைப்புப் பாடல் "உலகம் இருப்பது பாசத்துக்காக " பாடலை குலுங்கி குலுங்கி உருகிக் கேட்பார். 

எப்படியோ அப்பா உருவமாக உலகில் இல்லை என்றாலும் கேட்கின்ற பாடல்களில், படிக்கின்ற விஷயங்களில், பார்க்கின்ற காட்சிகளில்  தத்ரூபமாக வாழ்கிறார். அப்பா இருந்தால் அங்கு அம்மா இல்லாமலா? 

சிங்கம் என்றால்  என் தந்தைதான் - இப்படித்தான் ஒவ்வொருவரும் நினைக்கிறார். நானும் அப்படித்தான் 

FROM  NA. MUTHUKUMAR SIR I DEDICATE THE SONG THEIVANGAL ELLAM THOTRE POGUM SONG TO MY FATHER

நான் இன்று ஆசிரியையாக இருப்பதற்கு மாணவர்களே காரணம். எப்படி?


காரணங்கள் இதோ.


அவர்கள் என்னை மதிக்கிறார்கள். அது தரும் போதை அளப்பரியது. சிலர் மதிப்பது போல் நடித்திருக்கலாம். ஆனால் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு என் மாணவர்களே காரணம். 


சந்தேகங்கள் எழுப்புவதன் மூலம் என்னை மேலும் படிக்கத் தூண்டுகிறார்கள்.  சிலர் எனக்குத் தெரிகிறதா என் அறிய கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களையும் திருப்திப்படுத்த நான் மிகையாகப் படிக்க வேண்டியிருக்கிறது. 
 அடாவடியாக நடப்பதன்  மூலம் இப்படியும் ஆட்கள் உள்ளார்கள் என தெரிவிக்கிறார்கள். எனவே இது போன்ற ஆட்களை எப்படி ப[ண்]யன்படுத்துவது என என் மூளையை துருப்  பிடிக்கா வண்ணம் பயன்படுத்துகிறேன். 


சில மாணவர்கள் ஒரு தடவை சொன்னாலே புரிந்து கொள்வர். சிலருக்கு சில தடவை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும். பலருக்கு பல தடவை கூற வேண்டியிருக்கும். இதன் மூலம் பொறுமையை எனக்கு கற்பித்திருக்கிறார்கள்.



பல நேரங்களில் தவறுகளுக்காகக் கடிந்திருப்போம். அவற்றை மறந்து மன்னிக்கக் கூடியவர்கள். சில நேரங்களில் தவறு செய்யாமல் கூட திட்டு வாங்கியிருப்பார்கள். ஆனாலும் மன்னிப்பார்கள். [வேறு வழி இல்லை ]

மிக மிக மிக முக்கியமாக நான் படித்த syllabus மிகப் பழையதாக இருந்திருக்கும். ஆனால் இன்றைய மாணவர்களின் அறிவுத் திறனுக்கு தீனி போட வேண்டி புது syllabus படி பாடம் நடத்த தூண்டுகோலாய் இருக்கிறார்கள் 


எனவே மாணவர்களே என்னையும் ஆசிரியையாக அங்கீகரித்த உங்கள் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி!

வாழ்க  நீவிர்! எனவே வளர்வோம் நாங்கள்!




நான் இன்று ஆசிரியையாக இருப்பதற்கு மாணவர்களே காரணம். எப்படி?


காரணங்கள் இதோ.


அவர்கள் என்னை மதிக்கிறார்கள். அது தரும் போதை அளப்பரியது. சிலர் மதிப்பது போல் நடித்திருக்கலாம். ஆனால் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு என் மாணவர்களே காரணம். 


சந்தேகங்கள் எழுப்புவதன் மூலம் என்னை மேலும் படிக்கத் தூண்டுகிறார்கள்.  சிலர் எனக்குத் தெரிகிறதா என் அறிய கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களையும் திருப்திப்படுத்த நான் மிகையாகப் படிக்க வேண்டியிருக்கிறது. 
 அடாவடியாக நடப்பதன்  மூலம் இப்படியும் ஆட்கள் உள்ளார்கள் என தெரிவிக்கிறார்கள். எனவே இது போன்ற ஆட்களை எப்படி ப[ண்]யன்படுத்துவது என என் மூளையை துருப்  பிடிக்கா வண்ணம் பயன்படுத்துகிறேன். 


சில மாணவர்கள் ஒரு தடவை சொன்னாலே புரிந்து கொள்வர். சிலருக்கு சில தடவை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும். பலருக்கு பல தடவை கூற வேண்டியிருக்கும். இதன் மூலம் பொறுமையை எனக்கு கற்பித்திருக்கிறார்கள்.



பல நேரங்களில் தவறுகளுக்காகக் கடிந்திருப்போம். அவற்றை மறந்து மன்னிக்கக் கூடியவர்கள். சில நேரங்களில் தவறு செய்யாமல் கூட திட்டு வாங்கியிருப்பார்கள். ஆனாலும் மன்னிப்பார்கள். [வேறு வழி இல்லை ]

மிக மிக மிக முக்கியமாக நான் படித்த syllabus மிகப் பழையதாக இருந்திருக்கும். ஆனால் இன்றைய மாணவர்களின் அறிவுத் திறனுக்கு தீனி போட வேண்டி புது syllabus படி பாடம் நடத்த தூண்டுகோலாய் இருக்கிறார்கள் 


எனவே மாணவர்களே என்னையும் ஆசிரியையாக அங்கீகரித்த உங்கள் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி!

வாழ்க  நீவிர்! எனவே வளர்வோம் நாங்கள்!




திங்கள், 22 ஆகஸ்ட், 2016

வாலு பசங்க!

22.08.2016   XII  A
ஒவ்வொரு நாளும் என் வகுப்பில் நான் பெரும் அனுபவங்கள் எனக்கு நல்ல நல்ல படிப்பினைகளைத் தருகிறது. ஒரு ஆசிரியராக இல்லாமல் ஒரு சக மனுஷியாக அவர்களை நோக்கினால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் விளையாட்டும் அதனைத் தொடர்ந்த குஷியும் நமக்கும் ஒட்டிக் கொள்ளும்[ ஆசிரியையாக நோக்கினால் கொல்லும்]. அப்பப்பா என்னே ஒரு சமய சந்தர்ப்ப விமர்சனங்கள். இவை எல்லாம் திறமை என எண்ணினால் ஏன் அவர்களால் படிக்க இயலாது.

ஆனால் இன்று ஏனோ மாணவர்கள் கவனம் பாடத்தில் இல்லவே இல்லை. இஃது என்னை மிகவும் வேதனைப் படுத்தியது. எனக்குள் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கவே செய்தது    ஒருவேளை என் கற்பித்தல் திறன் சரியில்லையோ என எண்ணத் தோன்றியது. இறைவா என் மாணவர்களின் இயல்பை சரியாகப் படித்து படிப்பினை படிப்பிக்க எனக்கு வரம் பல தர வேண்டும். என் மாணவச் செல்வங்களின் நல்வாழ்வில் எனது பங்கும் இருக்கப் பிரயாசைப்படுகிறேன். இறைவா அருள்வாய்!



ஓம்  நமச்சிவாய!





சனி, 20 ஆகஸ்ட், 2016

மனத்தைத் தொட்ட வாசகம்

இன்று OLA  ஆட்டோ ஒன்றின் பின்புறம் நான் கண்ட வாசகம்

வறுமை வந்தால் வாடாதே!
வசதி வந்தால் ஆடாதே!
எத்துணை பொருத்தமான வாசகம். வாழ்க்கை பரிச்சையில் நாம் காணும் தேர்ச்சி வசதி அல்லது வறுமை ஆகும். எது வந்தாலும் அதனை முறையாகப் பயன்படுத்த நாம் கற்க வேண்டும். பரிட்சைக்குப் பின்பு படிப்பது வாழ்க்கையில் மட்டும் தான்..

என் தந்தை அடிக்கடி கூறும் வாசகம் மண்ணைத் தின்றாலும் மறைத்துத் திண். இதன் அர்த்தம் பிறருக்குப் பகிரக் கூடாது என்பதல்ல! நான் மண் சாப்பிடும் அளவு நிலை தாழ்ந்து உள்ளேன் எனப் பிறருக்குத் தெரிவிக்கக் கூடாது என்பதாகும். வறுமையில் செம்மை என்பதாகும். அதையே இவ்வாசகங்களும் உணர்த்துவதாக உணர்கிறேன்.


மனத்தைத் தொட்ட வாசகம்

இன்று OLA  ஆட்டோ ஒன்றின் பின்புறம் நான் கண்ட வாசகம்

வறுமை வந்தால் வாடாதே!
வசதி வந்தால் ஆடாதே!
எத்துணை பொருத்தமான வாசகம். வாழ்க்கை பரிச்சையில் நாம் காணும் தேர்ச்சி வசதி அல்லது வறுமை ஆகும். எது வந்தாலும் அதனை முறையாகப் பயன்படுத்த நாம் கற்க வேண்டும். பரிட்சைக்குப் பின்பு படிப்பது வாழ்க்கையில் மட்டும் தான்..

என் தந்தை அடிக்கடி கூறும் வாசகம் மண்ணைத் தின்றாலும் மறைத்துத் திண். இதன் அர்த்தம் பிறருக்குப் பகிரக் கூடாது என்பதல்ல! நான் மண் சாப்பிடும் அளவு நிலை தாழ்ந்து உள்ளேன் எனப் பிறருக்குத் தெரிவிக்கக் கூடாது என்பதாகும். வறுமையில் செம்மை என்பதாகும். அதையே இவ்வாசகங்களும் உணர்த்துவதாக உணர்கிறேன்.