22.08.2016 XII A
ஒவ்வொரு நாளும் என் வகுப்பில் நான் பெரும் அனுபவங்கள் எனக்கு நல்ல நல்ல படிப்பினைகளைத் தருகிறது. ஒரு ஆசிரியராக இல்லாமல் ஒரு சக மனுஷியாக அவர்களை நோக்கினால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் விளையாட்டும் அதனைத் தொடர்ந்த குஷியும் நமக்கும் ஒட்டிக் கொள்ளும்[ ஆசிரியையாக நோக்கினால் கொல்லும்]. அப்பப்பா என்னே ஒரு சமய சந்தர்ப்ப விமர்சனங்கள். இவை எல்லாம் திறமை என எண்ணினால் ஏன் அவர்களால் படிக்க இயலாது.
ஆனால் இன்று ஏனோ மாணவர்கள் கவனம் பாடத்தில் இல்லவே இல்லை. இஃது என்னை மிகவும் வேதனைப் படுத்தியது. எனக்குள் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கவே செய்தது ஒருவேளை என் கற்பித்தல் திறன் சரியில்லையோ என எண்ணத் தோன்றியது. இறைவா என் மாணவர்களின் இயல்பை சரியாகப் படித்து படிப்பினை படிப்பிக்க எனக்கு வரம் பல தர வேண்டும். என் மாணவச் செல்வங்களின் நல்வாழ்வில் எனது பங்கும் இருக்கப் பிரயாசைப்படுகிறேன். இறைவா அருள்வாய்!
ஓம் நமச்சிவாய!
ஒவ்வொரு நாளும் என் வகுப்பில் நான் பெரும் அனுபவங்கள் எனக்கு நல்ல நல்ல படிப்பினைகளைத் தருகிறது. ஒரு ஆசிரியராக இல்லாமல் ஒரு சக மனுஷியாக அவர்களை நோக்கினால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் விளையாட்டும் அதனைத் தொடர்ந்த குஷியும் நமக்கும் ஒட்டிக் கொள்ளும்[ ஆசிரியையாக நோக்கினால் கொல்லும்]. அப்பப்பா என்னே ஒரு சமய சந்தர்ப்ப விமர்சனங்கள். இவை எல்லாம் திறமை என எண்ணினால் ஏன் அவர்களால் படிக்க இயலாது.
ஆனால் இன்று ஏனோ மாணவர்கள் கவனம் பாடத்தில் இல்லவே இல்லை. இஃது என்னை மிகவும் வேதனைப் படுத்தியது. எனக்குள் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கவே செய்தது ஒருவேளை என் கற்பித்தல் திறன் சரியில்லையோ என எண்ணத் தோன்றியது. இறைவா என் மாணவர்களின் இயல்பை சரியாகப் படித்து படிப்பினை படிப்பிக்க எனக்கு வரம் பல தர வேண்டும். என் மாணவச் செல்வங்களின் நல்வாழ்வில் எனது பங்கும் இருக்கப் பிரயாசைப்படுகிறேன். இறைவா அருள்வாய்!
ஓம் நமச்சிவாய!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக