செவ்வாய், 1 நவம்பர், 2016

அனுபவம் புதிது ! என் பிள்ளைகளிடம் கண்டேன்!

                            நேற்று 31.10.2016  என் மனதிற்குகந்த மாணவி ஸ்வேதாவிற்கு பிறந்த நாள். ஸ்வேதாவின் நண்பர்கள் என்னை என்னை சர்ப்ரைஸாக அவர்கள் முன் நிறுத்தத் திட்டமிட்டனர். இது சம்மந்தமாக என் மற்றொரு முன்மாதிரி மாணவன் வெங்கட்ராமன்  ஒரு வாரம் முன்னதாகவே செல்லிடப்பேசியில் அழைத்துப் பேசினார். எனக்கும் என் மாணவர்களைப் பார்க்கும் ஆவல் இருந்ததால் ஏற்றுக் கொண்டேன். மேலும் ஞாயிறு அன்று மீண்டும் ஞாபகப் படுத்தினார்கள்.
                               ஏற்கெனவே  திட்டமிட்டபடி 4.45 p . m  போல் 12C  பஸ் நிறுத்தத்தில் வெங்கட் காத்திருந்து என்னை அழைத்துச் சென்றார். செல்கின்ற வழியில் தன் கல்லூரி அனுபவங்களை கூறிக் கொண்டே வந்தார். மனதிற்குள் வாழ்வின் அடுத்த படியை என்ன அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என் மாணவர் என புளகாங்கிதம் அடைந்தேன். So happy. வீட்டடின் அழைப்பு மணியை அழுத்திக் காத்திருந்தோம். ஸ்வேதாஎன்னைப் பார்த்த உடன் மிகுந்த பூரிப்பான புன்னகையுடன் வரவேற்றார்.