ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பிரவுஸியதில் பிடித்தது,

Compu Comedy 


P1  : நான் தான் Lord of Internet தெரியுமா?
  :   எப்படி ?
  :   ஏன்னா என் பெயர் மகாலின்கேஷ்வர் (மகா -Hyper  - Link)ஆயிற்றே!

Why Linux has cat command?
To control the mouse !? ! ...

Why is the cat moving around the computer?
To catch the mouse?!

டச் ஸ்க்ரீன் கம்ப்யூட்டர் உருவானதன் காரணம் என்ன?
mouse - க்கு மவுசு போனதால்.

கவி பாரதி கணிப்பொறியாளர் ஆக இருந்திருந்தால் அவர் பெயர் என்னவாக இருந்திருக்கும்?
கணி பாரதி

கம்ப்யூட்டர் திருக்குறள்:
1. Copy paste செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
    Coding  செய்து  சாவார்.

2. எம்மொழி மறந்தார்க்கும் Job  உண்டாம் job இல்லை
    Java -வை மறந்தவர்க்கு.

3. Bug கண்டுபிடித்தாரை  ஒறுத்தல் அவர் நாண
    Debug செய்து விடல்

4. கற்க கசடற கம்ப்யூட்டர் - ல் கற்றபின்
    சேர்க்க ஷேர் செய்ய.

5. டிவிட்டரினால் டிவிட்டிய செய்தி சிறிதெனினும்
    Trend -ன் மாணப் பெரிது.

Sardharji in a computer class
              Sir         : What is Microsoft Excel?
              Sardarji :  It is a new brand of Surf Excel sir !!??..
              Sir         :   >:-(

Life Before Computer [ BC]

  • Memory was something that you lost with age
  • An application was for an employment
  • A program was a TV show
  • A cursor used profanity. [cursing ]
  • Keyboard was a Piano
  • A web was a spider's home
  • A virus was the flu
  • A CD was a bank account
  • A hard drive was a long trip on the road
  • A mouse pad was where mouse lived.

Top ten Free Learning Websites For Kids [ International Level]

a year of many firsts: Ready Made for Second Grade! Free Websites for kids



Image result for alt ctrl delImage result for alt ctrl del

Image result for computer cartoons

உலக தாய்மொழி தினம்

உலக தாய்மொழி தினம் - 21.02.2015

அம்மா - பிள்ளைக்கு உலகம்.

உலகத்தை பிள்ளைக்கு சொல்லித் தர தாய் பயன்படுத்தியது மொழி, அதன் வழி பிள்ளைகளை பண்படுத்தினாள் .

அத்தகு  தாய்மொழியின் தினத்தைக் கொண்டாடுவது என் தாயையே கொண்டாடுவது போல் ஆகும்.

என் தாய்  மணிவயிரம் தந்த மணிமொழியாம் தமிழ் மொழிக்கும், உலகின் பிற மொழிகளுக்கும், அம்மொழி மாந்தர்களுக்கும் அடியேனின் வாழ்த்துக்கள்.

சனி, 7 பிப்ரவரி, 2015

நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

மீனாவிற்கு கல்யாணம் !


நான் வாழ வைப்பேன் என்ற அப்பவோ விண்ணில் விண்மீனாய்!

அசலை விட வட்டி (பேரன் பேத்தி) தான் சுவாரசியமானது என்ற அம்மாவோ விடி வெள்ளியாய்!

அன்பை தந்து அரவணைக்க அக்கா அண்ணன் தம்பி இதற்கும் மேல் சொந்தங்கள் பூம்பாதையாய்!

மண்ணில் நல்ல வண்ணம் வாழ மாதவன் வெங்கடேசன் ஆலயத்தில் சுப்ரபாத நேரத்தில் துயில் எழும் இறைவன் துயிலால் தான் பெற்ற ஆற்றலை வாரி வழங்க வாரியாய் !

சுற்றம் சூழ வாழ்வை துவங்கும் தங்கைக்கு வாழ்த்துக்கள் !

மதுரையின் இளவலுக்கு, மதுரையின் நாயகியை அண்ணன் கேசவனின் கையால் கண்ணிகா தானம் !

நாள் : 09.02.2015
இடம் : சின்ன திருப்பதி, காருவள்ளி , சேலம்.

அருட்பேராற்றல்  கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வீர்களாக! வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!