சனி, 20 ஆகஸ்ட், 2016

மனத்தைத் தொட்ட வாசகம்

இன்று OLA  ஆட்டோ ஒன்றின் பின்புறம் நான் கண்ட வாசகம்

வறுமை வந்தால் வாடாதே!
வசதி வந்தால் ஆடாதே!
எத்துணை பொருத்தமான வாசகம். வாழ்க்கை பரிச்சையில் நாம் காணும் தேர்ச்சி வசதி அல்லது வறுமை ஆகும். எது வந்தாலும் அதனை முறையாகப் பயன்படுத்த நாம் கற்க வேண்டும். பரிட்சைக்குப் பின்பு படிப்பது வாழ்க்கையில் மட்டும் தான்..

என் தந்தை அடிக்கடி கூறும் வாசகம் மண்ணைத் தின்றாலும் மறைத்துத் திண். இதன் அர்த்தம் பிறருக்குப் பகிரக் கூடாது என்பதல்ல! நான் மண் சாப்பிடும் அளவு நிலை தாழ்ந்து உள்ளேன் எனப் பிறருக்குத் தெரிவிக்கக் கூடாது என்பதாகும். வறுமையில் செம்மை என்பதாகும். அதையே இவ்வாசகங்களும் உணர்த்துவதாக உணர்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக