என் பிள்ளை
உன் எச்சிலுணவு எனக்கு அமிர்தம்
உன் உளறல்
எனக்குக் கவிதை
உன் தடுமாற்றம்
எனக்கு பரதம்
உன் சிணுங்கல்
எனக்கு இன்னிசை
உன் மழழைக் கிறக்கத்தில்
உன் முத்தம் தரும் உன்மத்தத்தில் - மகனே
என்னையே நான் மறந்தேன் - நான்
சிறு சிறு தவறுகளையும்
எல்லை மீறல்களையும்
மன்னிக்காத ஒரு
மாண்புமிகு ஆசிரியை என்பதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக