புதன், 14 மே, 2014

என் பிள்ளை

என் பிள்ளை 
உன்  எச்சிலுணவு
       எனக்கு அமிர்தம்
உன் உளறல்
      எனக்குக் கவிதை
உன் தடுமாற்றம்  
      எனக்கு பரதம்
உன் சிணுங்கல் 
      எனக்கு இன்னிசை
உன் மழழைக் கிறக்கத்தில்
உன் முத்தம் தரும் உன்மத்தத்தில் - மகனே
என்னையே  நான் மறந்தேன் -  நான்
சிறு சிறு தவறுகளையும்
எல்லை மீறல்களையும்
மன்னிக்காத ஒரு
மாண்புமிகு ஆசிரியை என்பதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக