புதன், 14 செப்டம்பர், 2016

அன்னையின் தாலாட்டு

எம் அன்னை எங்களைத் தாலாட்ட இப்பாடலை அடிக்கடி பாடுவார்கள். இப்பாடல் எம் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அத்துப்படி. நாங்களும் இக்குடும்பத்தில் புதிதாய் வருகை தரும் புது அங்கத்தினர்களுக்கு இதனைப் பாடியே தாலாட்டுகிறோம் என்பதில் பேருவகை கொள்கிறோம்.

பாடல் வரிகளை யாரோ ஒரு அன்பர் யூடியூபில் அழகாக வரித்திருந்தார். அவரின் உதவியால் பாடல் வரிகளை இப்பதிவில் சமர்ப்பிக்கிறேன். நன்றி அன்பரே!
மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, மண்ணுக்கு, மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த,குழந்தைத் தாய்க்குப் பாரமா, வாடிய நாளெல்லாம், வருந்தி வருந்தித் தவமிருந்து, வாடிய நாளெல்லாம், வருந்தி வருந்தித் தவமிருந்து, தேடிய நாள் தன்னில், செல்வமாய் வந்தவளே, தேடிய நாள் தன்னில், செல்வமாய் வந்தவளே, மலடி மலடியென்று, வையகத்தார் ஏசாமல், மலடி மலடியென்று வையகத்தார் ஏசாமல், தாய் என்ற, பெருமை தனை, மனம் குளிரத் தந்தவளே, தாய் என்ற, பெருமை தனை, மனம் குளிரத் தந்தவளே, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த,குழந்தைத் தாய்க்கு, பாரமா, மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, அழுதால் அரும்பு திரும், அண்ணாந்தால், பொன் உதிரும், அழுதால் அரும்பு திரும், அண்ணாந்தால், பொன் உதிரும், சிரித்தால், முத்து திரும், வாய் திறந்தால், தேன் சிதறும், சிரித்தால், முத்துதிரும், வாய் திறந்தால், தேன் சிதறும்,பிள்ளையைப் பெற்றுவிட்டால், போதுமா, பேணி, வளர்க்க வேனும், தெரியுமா, பிள்ளையைப் பெற்றுவிட்டால், போதுமா, பேணி, வளர்க்க வேனும், தெரியுமா, அல்லலைக் கண்டு, மனசு அஞ்சுமா, குழந்தை, அழுவதைக் கேட்டு, மனசு மிஞ்சுமா, அல்லலைக் கண்டு, மனசு அஞ்சுமா,குழந்தை, அழுவதைக் கேட்டு, மனசு மிஞ்சுமா, மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, - mannuku maram paarama marathku - movie:- Thai Piranthal Vazhi Pirakkum (தை பிறந்தால் வழி பிறக்கும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக