செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

வாழ்த்துக்கள் சொல்ல வந்தேன்.

 வகுப்பு ஆசிரியையாக இந்த வருடம் நான் மாணவர்கள் மட்டுமே அடங்கிய வகுப்பான XII  A விற்கு பொறுப்பேற்றுக் கொண்டேன். முதலில் மிகவும் பயந்த நான் நாட்கள் செல்லச் செல்ல அவர்களுள் ஒருவளாகக் கலந்தே போனேன்.

எவ்வளவுக்கு எவ்வளவு ஆட்டம் போடுகிறார்களோ அவ்வளவுக்கும் அன்பு மிக்கவர்கள். நன்றி இறைவனுக்கு. இந்தக் குழந்தைகளுக்கு இப்பொழுதுதான் பொறுப்பு ஏற்ற மாதிரி உள்ளது.  
இதோ நாளை வாழ்வின் திருப்பு முனையை எதிர் கொள்ளவிருக்கிறார்கள். ஆம் நாளையிலிருந்து (02.03.2017-வியாழன்) அவர்களுக்கு +2 பொதுத் தேர்வு ஆரம்பமாகின்றது. அதைச் செவ்வனே செய்து மீண்டு நல்ல தேர்ச்சியுடன் வெளியேற எல்லாம் வல்ல இறைவன், அவர்களுக்கு உடல், உள்ள நலனையும், நல்ல சூழல்களையும், இடத்திற்கேற்ற விவேகத்தையும், எழுதுவதில் விவேகமான வேகத்தையும் தர வேண்டுமாயும், 100% மதிப்பெண்கள், முதல் மதிப்பெண்கள், 100% தேர்ச்சி என முன்னேறி வர அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக